close
Choose your channels

எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் கொரோனாவுக்கு பலி: அதிர்ச்சி தகவல்

Friday, September 11, 2020 • தமிழ் Comments
MGR
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகம் முழுவதும் கடந்த 5 மாதங்களாக மிகவும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் தற்போது தலைவிரித்தாடுகிறது. நேற்று ஒரே நாளில் இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழகத்திலும் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் தமிழகத்தில் கொரோனாவால் பொதுமக்கள் மட்டுமின்றி எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் ஆகியோர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் இதில் கொரோனாவுக்கு ஒரு எம்பி மற்றும் ஒரு எம்எல்ஏ பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பல விஐபிக்களை தாக்கி வரும் கொரோனா வைரஸ் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் அண்ணன் மகன் எம்.ஜி.சி சந்திரன் அவர்களின் உயிரையும் பலி வாங்கியுள்ளது. எம்ஜிஆரின் அண்ணன் மகன் எம்.ஜி.சி சந்திரன் அவர்கள் கொரோனா தொற்று காரணமாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எம்ஜிஆரின் அண்ணன் மகன் கொரோனாவுக்கு பலியானதால் எம்ஜிஆரின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos