எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் பட தயாரிப்பாளர் காலமானார்..  ரஜினி உள்பட பிரபலங்கள் இரங்கல்..!

  • IndiaGlitz, [Wednesday,April 10 2024]

மக்கள் திலகம் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட பல பிரபலங்கள் நடித்த படங்களை தயாரித்தவரும் பிரபல அரசியல்வாதியுமான ஆர்.எம். வீரப்பன் நேற்று காலமானார். அவருக்கு வயது 98. ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் காலமானதை அடுத்து ரஜினிகாந்த், எஸ் பி முத்துராமன் உள்பட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1964ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடித்த ’தெய்வத்தாய்’ என்ற படத்தை முதன்முதலாக தயாரித்த ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் சத்யா மூவிஸ் நிறுவனம், அதன் பிறகு ’இதயக்கனி’ உள்பட ஏராளமான எம்ஜிஆர் படங்களை தயாரித்தது.

ரஜினிகாந்த் நடித்த ’ராணுவ வீரன்’ ’மூன்று முகம்’ ’தங்க மகன்’ ‘பாட்ஷா’ கமல்ஹாசன் நடித்த ’காக்கி சட்டை’ ’காதல் பரிசு’ உள்பட பல படங்களை தயாரித்தது. மேலும் சிவாஜிகணேசன், சத்யராஜ் இணைந்து நடித்த ’புதிய வானம்’ படத்தையும் இந்நிறுவனம் தான் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக நேற்று ஆர்.எம்.வீரப்பன் காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆர் எம் வீரப்பன் அவர்களின் மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த், ‘எம்ஜிஆரின் ’தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் வலது கையாக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் என்றும், இன்று அவர் நம்மை விட்டு சென்று விட்டார் என்றும் அவரால் உருவாக்கப்பட்ட பல சிஷ்யர்கள் மத்திய மாநில அமைச்சர்களாகி தற்போது பேரும் புகழும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும் ஆர்.எம்.வீரப்பன் ஒருபோதும் பணத்திற்கு பின்னால் சென்றவர் கிடையாது, அண்ணா கூறிய கடமை கண்ணியம் கட்டுப்பாட்டு என்ற கொள்கையை கடைப்பிடித்து வாழ்ந்தவர், எனக்கும் அவருக்குமான நட்பு மிகவும் ஆழமானது, புனிதமானது என்றும் தெரிவித்தார். மேலும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுபவங்கள் என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

More News

இந்த அறிகுறி எல்லாம் இருந்தால் கண் கேன்சரா ?

முதலில் நாம் அதை பற்றி தேடுவது ஆராய்வது எல்லாம் கூகுள் தான்.அதில் தேடி எனக்கு இது தான் பிரச்சினை என அவர்களே முடிவு செய்து விடுவார்கள்.இந்த மாதிரியான செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும்...

எல்லோருக்கும், எல்லாவற்றுக்கும் பதில் சொன்னது காலம்.. விஷ்ணு விஷால் பகிர்ந்த ஆச்சரிய புகைப்படம்..

எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் பதில் சொல்வது காலம் ஒன்று தான் என்று நடிகர் விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளத்தில் கூறி ஒரு புகைப்படத்தையும் பதிவு செய்துள்ள நிலையில்

பிரபல இயக்குனருக்கு கிளி ஜோசியம் பார்த்தவர்கள் கைது.. என்ன நடந்தது?

பிரபல இயக்குனருக்கு கிளி ஜோசியம் பார்த்த ஜோசியர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் ஒரு புத்திசாலி போட்டியாளர்.. அவருடன் மோதுவது நல்லது தான்: பாஜக நடிகை..

விஜய் ஒரு புத்திசாலி என்றும் அவருடன் அரசியல் ரீதியாக மோதுவது நல்லது தான் என்றும் விஜய்யுடன் நடித்தவரும் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இருப்பவருமான பிரபல நடிகை ஒருவர் கூறி இருப்பது பரபரப்பை

வீட்டில் செல்வம், நிம்மதி, குழந்தை பாக்கியம் பெற வாஸ்து டிப்ஸ் | Ashok Kandasamy பேட்டி

புகழ்பெற்ற வாஸ்து நிபுணர் Ashok Kandasamy, ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், வீட்டில் செல்வம், நிம்மதி, குழந்தை பாக்கியம் மற்றும் கணவன் மனைவி அந்நியோன்னியம்