close
Choose your channels

கொரோனா அன்லாக் 3.0 விதிமுறைகள் அறிவிப்பு: தியேட்டர்கள் திறக்க அனுமதியா?

Wednesday, July 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவும் அதனையடுத்து அன்லாக் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அன்லாக் 2.0 வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் அன்லாக் 3.0வில் என்னென்ன தளர்வுகள் அறிவிக்கப்படும், குறிப்பாக திரையரங்குகள், ஜிம்கள் திறக்க அனுமதியா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் சற்றுமுன் மத்திய அரசு அன்லாக் 3.0 விதிமுறைகளை அறிவித்துள்ளது. இதில் உள்ள முக்கிய விபரங்களை தற்போது பார்ப்போம்

* இந்தியா முழுவதும் இரவு நேர ஊரடங்கு ரத்து

* யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் ஆகஸ்ட் 5 முதல் அனுமதி

* பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31 வரை இயங்காது

* சமூக இடைவெளியுடன் சுதந்திர தின கொண்டாடப்படும். சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்

* திரையரங்குகள், மெட்ரோ ரயில் சேவை, நீச்சல் குளம், பார்களுக்கு அனுமதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும்

* விளையாட்டு போட்டிகள், மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கு தொடர்ந்து தடை

* பெரிய கூட்டங்கள் நடத்த தடை தொடரும்

* தீவிர லாக்டவுன் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆகஸ்ட் 31 வரை லாக்டவுன் தொடரும்

மேற்கண்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.