சசிகலா கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டு ஜெயில்: நீதிமன்றம் அதிரடி

  • IndiaGlitz, [Friday,November 17 2017]

கடந்த சில மாதங்களாகவே சசிகலா குடும்பத்தினர்களுக்கு எதிராக வலை பின்னப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முதலில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்து அவர் தண்டனை அனுபவித்து வருகிறார்

இந்த நிலையில் கடந்த வாரம் தமிழகம் முழுவதும் சசிகலா உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிரடியாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி சசிகலா குடும்பத்தினர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு எதிரான சொகுசு கார் இறக்குமதி மோசடி வழக்கில் நடராஜன் உட்பட 4 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

லண்டனில் இருந்து போலி ஆவணங்கள் மூலம், தமிழரசி பப்ளிகேஷன் என்ற நிறுவனத்தின் பெயரில் நடராஜன் மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் ஆகியோர் கடந்த 1994ஆம் ஆண்டு லெக்சிஸ் என்ற சொகுசு காரை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்துள்ளனர். இதன்மூலம் ரூ.1.84 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடராஜன் சமீபத்தில் தான் உடல்நலமின்றி அறுவை சிகிச்சை செய்து வீடுதிரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் சசிகலாவும் அவரது கணவரும் சிறையில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

More News

தமிழ் சினிமாவின் ஒரே காதல் மன்னன் 'ஜெமினி கணேசன்: பிறந்த நாள் பகிர்வு

தமிழ் சினிமாவை பொருத்தவரை பல நடிகர்கள் காதல் காட்சியில் உருகி உருகி நடித்திருந்தாலும், 'காதல் மன்னன்' என்று சொன்னதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது ஜெமினி கணேசன் தான்.

விஷாலின் 'இரும்புத்திரை' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஷால் நடித்த 'துப்பறிவாளன்' சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படமான 'இரும்புத்திரை' திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு டிஜிபி ஜாங்கிட் பாராட்டு

கார்த்தி நடிப்பில் வினோத் இயக்கிய 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்று வருகிறது

கற்பனையை விட உண்மை சம்பவம் பிரமிக்க வைக்கும்: தீரன் படம் குறித்து சூர்யா

கார்த்தி, ராகுல் ப்ரித்திசிங் நடிப்பில் சதுரங்கவேட்டை இயக்குனர் வினோத் இயக்கிய 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது

31 நாள் குழந்தையை காப்பாற்ற 518 கிமீ தூரத்தை 6 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்

கேரளாவில் 31 நாள் குழந்தை ஒன்றுக்கு உடல்நலமின்றி போகவே உடனடியாக திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.