close
Choose your channels

செம குஷியில் ஊழியர்கள்… பேரிடர் காலத்தில் பெரும்தொகையை போனஸ் வழங்கும் நிறுவனம்!

Friday, July 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகின் மிகப்பெரிய சாஃப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம், உலகெங்கிலும் உள்ள தனது ஊழியர்களுக்கு தலா 1,500 அமெரிக்க டாலர்களை போனஸ் வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் அந்நிறுவன ஊழியர்கள் பலரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மைக்ரோசாஃப்ட் நிறுவன ஊழியர்கள் கொரோனா நேரத்தை திறமையாகச் சமாளித்து பணியாற்றியதால் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் இந்த ஊக்கத்தொகை 1.1 லட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாஃப்ட் வழங்கும் இந்த ஊக்கத்தொகையானது கார்பரேட் துணைத் தலைவர் பதவிக்கு கீழ் பணி செய்யும் 1,30,000 ஊழியர்களுக்கு கிடைக்கும் எனவும் இதனால் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை மைக்ரோசாஃப்ட் செலவிட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பலரும் மகிழ்ச்சி கடலில் தத்தளித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.