close
Choose your channels

நள்ளிரவு பூஜை செய்த சாமியாரும் இளம்பெண்ணும்: சாமியார் மட்டும் மர்ம மரணம்!

Thursday, September 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருவள்ளூரில் சாமியார் ஒருவர் இளம்பெண்ணுக்காக நள்ளிரவில் பூஜை செய்து கொண்டிருந்தபோது பூஜையறையில் மர்ம பொருள் ஒன்று வெடித்ததால் உடல்கருகி மரணம் அடைந்தார். ஆனால் அதே அறையில் இருந்ததாக கூறப்படும் இளம்பெண் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பியது ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

திருவள்ளூர் பகுதியில் சாமியார் நந்தகோபால் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக ஜோதிடம், இயற்கை வைத்தியம் உள்ளிட்ட சேவைகளை அந்த பகுதி மக்களுக்கு செய்து வருகிறார். இவரிடம் திருவள்ளூரை சுற்றியுள்ளவர்கள் மட்டுமின்றி சென்னையில் இருந்தும் பலர் வந்து ஜோதிடம் கேட்டும் வைத்தியம் செய்து கொண்டும் செல்வதுண்டு

இந்த நிலையில் சென்னையை சேர்ந்த லாவண்யா என்ற பெண் இந்த சாமியாரிடம் வந்து தனக்காக பூஜை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். இதனையடுத்து பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு நள்ளிரவில் பூஜை தொடங்கியது. பூஜை தொடங்கிய சிலநிமிடங்களில் அந்த பூஜையறையில் மர்ம பொருள் ஒன்று வெடித்துள்ளது. இதனால் ஏற்பட்ட தீயில் சாமியார் நந்தகோபால் சம்பவ இடத்திலேயே உடல்கருகி மரணம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அதே அறையில் இருந்த லாவண்யாவுக்கு எந்தவித காயமும் இல்லாமல் இருந்ததை பார்த்து ஆச்சரியமும் அவர் மீது சந்தேகமும் அடைந்தனர்.

ஆனால் லாவண்யா, பூஜையின் இடையில் ஒரு பொருளை எடுக்க பக்கத்து அறைக்கு தான் சென்றதாகவும் அந்த சமயத்தில் மர்மபொருள் வெடித்ததால் தனக்கு காயம் ஏற்படவில்லை என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் போலீசார் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.