என்கவுண்டர் போலீஸார் புகைப்படங்களுக்கு பாலாபிஷேகம் செய்யும் பெண்கள்

  • IndiaGlitz, [Friday,December 06 2019]

ஐதராபாத்தை சேர்ந்த பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து உயிரோடு எரித்துக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர்களை இன்று அதிகாலை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். இந்த கொலையை நடித்துக் காட்ட கூறி சம்பவ இடத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றபோது நால்வரும் தப்பிக்க முயன்றதாகவும் இதனை அடுத்து வேறு வழியில்லாமல் அவர்களை என்கவுண்டர் செய்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

இந்த நிலையில் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நால்வரை என்கவுண்டர் செய்த போலீசாருக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. போலீசார் என்றாலே வெறுப்புடன் இருந்த பொதுமக்கள் இன்று திடீரென ஒரே நாளில் அவர்களை கொண்டாடி வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த அளவுக்கு அந்த பாலியல் குற்றவாளிகள் மீது பொதுமக்களுக்கு ஆத்திரம் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் கல்லூரி மாணவிகள் சிலர் காவல் ஆணையர் சஜ்ஜனார் அவர்களின் புகைப்படத்திற்கு பாலாபிஷேகம் செய்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் நடிகைகளுக்கு மட்டுமே பாலாபிஷேகம் செய்து வந்த இளைஞர்கள் தற்போது சமூக விழிப்புணர்ச்சி பெற்றுவிட்டதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 

More News

தெலுங்கானா என்கவுண்டர் போலீசார்களை பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யுங்கள்: பிரபல நடிகை கோரிக்கை

தெலங்கானா மாநில போலீசார் இன்று அதிகாலை நடத்திய என்கவுண்டர் நடவடிக்கைக்கு ஒரு பக்கம் பேராதரவு கிடைத்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் ஒரு சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

இதே தண்டனை மற்ற பாலியல் குற்றவாளிகளுக்கும் கிடைக்குமா? பிரபல வீராங்கனை கேள்வி

ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை இன்று அதிகாலை தெலுங்கானா போலீசார் சுட்டு, என்கவுண்டர் செய்த விவகாரம் நாட்டையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்திர பிரதேசத்தில் நடனத்தை நிறுத்தியதால் பெண் மீது துப்பாக்கிச் சூடு..! வீடியோ.

உத்திரபிரதேசம் சித்ரகூட் மாவட்டத்தில் நடனம் ஆடிய பெண்ணின் முகத்தில் ஒருவர் சுட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

என்கவுண்டர் செய்த போலீசார்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிப்பால் பரபரப்பு

ஹைதராபாத் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த நான்கு பேர்களை இன்று அதிகாலை தெலுங்கானா போலீசார் என்கவுன்டர் செய்தது

திருடலாம்னு வந்தேன் சார்.. ஆனா தூக்கம் வந்துருச்சு. திருடப்போன இடத்தில் தூங்கிய திருடன்.

விருதுநகரில் பெருமாள் கோயிலில் திருட வந்த செந்தூர்பாண்டி என்ற திருடன், மது போதையில் அங்கேயே உறங்கிவிட, அப்பகுதியில் ரோந்து சென்ற காவல்துறையினரிடம் சிக்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது.