செல்போன் வேவு பார்க்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு… பெகாசஸ் வெளியிட்ட அதிரடி பதில்!

  • IndiaGlitz, [Monday,July 26 2021]

பெகாசஸ் உளவுக் கருவிகள் உள்ளதால்தான் உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் சாலைகளில் சுதந்திரமாக நடமாடுவதாக அதனைத் தயாரித்த NSO நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தங்களது தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தியது கண்டறிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

பெகாசஸ் எனும் ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்கள், முக்கியப் பத்திரிக்கையாளர்கள் எனப் பலரின் செல்போன்களை மத்திய அரசு ஹேக் செய்து இருப்பதாக கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து உண்மையிலேயே மத்திய அரசு இதுபோன்ற சாஃப்ட்வேர்களை வைத்து உளவு பார்க்கும் வேலையில் ஈடுபட்டு இருக்கிறதா? அல்லது பெகாசஸ் செயலியை மத்திய அரசு பயன்படுத்துகிறதா? என்பது தொடர்பான எந்த விளக்கமும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் பெகாசஸ் செயலி குறித்து இந்தியாவில் மட்டுமல்ல பிரானஸ், இஸ்ரேல் போன்ற நாடுகளும் குற்றச்சாட்டுகளை எழுப்பி உள்ளன. இது குறித்த விசாரணைக்கு இந்த நாடுகள் தனிக்குழுவை அமைத்து இருக்கின்றன. மேலும் பெகாசஸ் செயலியால் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தனது தொலைபேசியையும் தொலைபேசி எண்ணையும் மாற்றியுள்ளார்.

இந்நிலையில் பெகாசஸ் ஸ்பைவேர் பற்றிய சர்ச்சை இந்தியாவில் தீவிரம் அடைந்து இருக்கிறது. இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்எல்ஒ எனும் சைபர் செக்யூரிட்டி (NSO) நிறுவனம் தயாரித்த பெகாசஸ் செயலியை இதற்குமுன்பு வங்கதேசம், மெக்சிகோ, சௌதி அரேபியா போன்ற நாடுகள் வாங்கிப் பயன்படுத்துவதாகவும் இதனால் அந்நாடுகளில் உள்ள முக்கியப் பிரமுகங்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுகிறது என்றும் கடும் குற்றச்சாட்டு எழுந்தது.

அந்த வகையில் தற்போது பிரான்ஸ், இந்தியா போன்ற நாடுகளில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உலக நாடுகள் இப்படி தொடர்ந்து பெகாசஸ் செயலி குறித்து சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில் ஃபேஸ்புக் நிறுவனமும் இதற்கு முன்பு இச்செயலியைக் குறித்து வழக்கு தொடர்ந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

காதலித்ததால் ஆண் உறுப்பு அறுக்கப்பட்ட இளைஞர்… வன்முறையில் முடிந்த சம்பவம்!

பீகார் மாநிலத்தில் தன் வீட்டு பெண்ணை காதலித்த 18 வயது இளைஞர் ஒருவரை ஆணுறுப்பை சிதைத்து கொலை செய்துள்ளனர்.

பா ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன்: 'சார்பாட்டா பரம்பரை' படம் குறித்து நடிகர் நாசர்!

சமீபத்தில் வெளியான பா ரஞ்சித் இயக்கிய 'சார்பாட்டா பரம்பரை திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தை திரை உலக பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பாராட்டி வருகின்றனர்.

இறந்த பின்பு குறட்டை விட்டு தூங்கிய நபர்… மருத்துவர்களே வியந்துபோன அதிசயம்!

ஸ்பெயின் நாட்டில் சிறையில் இருந்த ஜிமென்ஸ் எனும் நபர், உயிரிழந்த

தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் ரஜினிகாந்த் நண்பரின் பேத்தி!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பரின் பேத்தி நடிகை தன்யா ராம்குமார் தமிழ் திரையுலகில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தில் இணைந்த அனிருத்!

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவு கட்டத்திற்கு வந்து விட்டது என்பதும், இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த ஒரு படத்தின்