இசைஞானியை சந்தித்த தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ்.. மறைவுக்கு முன் பவதாரிணி செய்த சேவை..


Send us your feedback to audioarticles@vaarta.com


இசைஞானி இளையராஜாவை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இன்று சந்தித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு குறித்த புகைப்படம் அமைச்சரின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருப்பதாவது:
தமிழர்களின் பெருமை அய்யா இசைஞானி இளையராஜா அவர்களை அன்பின் நிமித்தமாக சந்தித்தோம்.பெண் கல்வியையும், பெண் உரிமையையும் வலியுறுத்தும் விதமாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையால் ‘பெண்-கல்வி, உரிமைகள், விடுதலை’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு பாடல் தயாரிக்கப்பட்டது.
அப்பாடல் உருவாக்கத்தில் சகோதரி பவதாரிணி அவர்களின் இசை பங்களிப்புக் குறித்து நன்றியோடு எடுத்துரைத்தோம். அன்போடு வரவேற்று இசையோடு எங்களை வழியனுப்பி வைத்தார். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பகிர்ந்துள்ளார்.
மேலும் இந்த பதிவில் மறைந்த பவதாரிணியின் இசையில் உருவான ’பெண் கல்வி உரிமைகள் விடுதலை’ என்ற பாடலையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பதிவு செய்துள்ளார். பவதாரிணி இசையில், சுகிர்தாரணி பாடல் வரிகளில் உருவான இந்த பாடலை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர்களின் பெருமை அய்யா இசைஞானி @ilaiyaraaja அவர்களை அன்பின் நிமித்தமாக சந்தித்தோம்.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) May 16, 2024
பெண் கல்வியையும், பெண் உரிமையையும் வலியுறுத்தும் விதமாக @tnschoolsedu-ஆல் ‘பெண்-கல்வி, உரிமைகள், விடுதலை’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு பாடல் தயாரிக்கப்பட்டது. அப்பாடல் உருவாக்கத்தில் சகோதரி… pic.twitter.com/46jMqaNghF
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments