'என் பேச்சை கேட்காதவர்களின் படம் வெற்றி பெறும்': அமைச்சர் துரைமுருகன்

  • IndiaGlitz, [Monday,March 20 2023]

என் பேச்சைக் கேட்காமல் சினிமா எடுத்தவர்களின் படம் வெற்றி பெறும் என அமைச்சர் துரைமுருகன் காமெடியாக சினிமா விழா ஒன்றில் பேசி உள்ளார்.

சாந்தனு, ஆனந்தி, பிரபு நடிப்பில் உருவாகிய ’ராவண கோட்டம்’ என்ற திரைப்படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ள நிலையில் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா துபாயில் நடந்தது. இந்த விழாவில் தமிழக அமைச்சர் துரைமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசிய போது ’எனக்கு அரசியல் பற்றி நன்றாக தெரிந்தாலும் சினிமா பற்றிய நுணுக்கங்கள் தெரியாது. நாங்கள் தமிழ் மொழியை இலக்கியத்தை சேர சோழ பாண்டியரை மேடைதோறும் பேசி வருகிறோம், ஆனால் எங்கோ வயலில் இருக்கிறவர்களுக்கும் ராஜராஜ சோழனையும் ராஜேந்திர சோழனையும் கொண்டு போய் சேர்த்தவர் சரித்திர மகா புருஷர் சுபாஷ்கரன்.

அவர் ’பொன்னியின் செல்வன்’ கதையை படமாக எடுக்க போகிறேன் என்று என்னிடம் கூறிய போது நான் அந்த கதையை 10 முறை படித்தவன், அதனால் அது சினிமாவுக்கு சரியாக வராது என்று கூறினேன். ஆனால் அவர் என் பேச்சைக் கேட்காமல் ’தமிழுக்காக இந்த படத்தை தயாரிக்கிறேன்’ என்று கூறினார். அந்த படம் மகத்தான வெற்றி பெற்றது.



அதேபோல் என் பேச்சை கேட்காமல் தயாரிப்பாளர் கண்ணன் ரவி ’ராவண கோட்டம்’ என்ற படத்தை எடுத்துள்ளார். இந்த படமும் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ‘சினிமா என்பது கத்தியில் நடப்பது மாதிரி, நான் சினிமாக்காரர்களோடு பழகி இருக்கிறேன், வாழ்ந்து இருக்கிறேன், என் தலைவர் கூட சினிமாக்காரர் தான், என்னை வளர்த்த எம்.ஜி.ஆரும் சினிமாக்காரர் தான், ஆனாலும் நான் சினிமா எடுக்கவில்லை என்று அவர் கூறினார்.

More News

மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தில் இந்த மாஸ் நடிகரா?

இயக்குனர் மிஷ்கின் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் மாஸ் நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. 

ஸ்ட்ராங் கேர்ள்: சமந்தாவின் வேற லெவல் வொர்க்-அவுட் புகைப்படத்திற்கு பிரபல நடிகை கமெண்ட்..!

நடிகை சமந்தா வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் ஸ்ட்ராங் கேர்ள் என பிரபல நடிகை ஒருவர் இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் செய்து உள்ளார். 

விஷ்ணுவர்தனின் அடுத்த படத்தில் அதிதி ஷங்கர்.. ஹீரோ யார் தெரியுமா?

அஜித் நடித்த 'பில்லா, 'ஆரம்பம்' உள்பட பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் அடுத்த திரைப்படத்தின் நாயகியாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்து

மனைவி, குழந்தைகளுடன் இயற்கை விவசாயம் செய்யும் தமிழ் நடிகர்.. வைரல் புகைப்படங்கள்..!

தமிழ் திரை உலகினர் தாங்கள் சம்பாதித்த பணத்தை ஹோட்டல், ஐடி, பங்குச்சந்தை உள்பட பல்வேறு இடங்களில் முதலீடு செய்து வரும் நிலையில் பிரபல நடிகர் ஒருவர் இயற்கை விவசாயம் செய்து

10 ஆண்டுகளுக்கு முன் காளையன் இப்படியா இருந்தார்? ஆச்சரிய புகைப்படங்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் கடந்த சில வாரங்களாக இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விறுவிறுப்பாக