'பிகில்', 'திகில்' யாராக இருந்தாலும் சட்டம் ஒன்றுதான்: அமைச்சர் ஜெயகுமார்

  • IndiaGlitz, [Wednesday,October 23 2019]

விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சியை காண விஜய் ரசிகர்கள் உள்பட அனைத்து தரப்பு ரசிகர்களூம் மிகவும் ஆவலுடன் உள்ளனர்

இந்த நிலையில் சென்னை உள்பட பெருநகரங்களில் இந்த படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படும் என தெரிகிறது. தமிழக அரசு இன்னும் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கொடுக்காத நிலையிலும் இந்த காட்சிகளுக்கு உரிய டிக்கெட்டுகளை திரையரங்கு உரிமையாளர்கள் விற்பனை செய்து வருகிறார்கள்

இந்த நிலையில் சிறப்பு காட்சிகளுக்கு அதிக கட்டணம் வாங்குவதால் பொது மக்கள் பாதிக்கப்படுவதாகவும், அதனால்தான் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லை என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கூறியிருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்

இதற்கு முன் பல திரைப்படங்கள் அதிகாலை காட்சி திரையிடப்பட்டபோது, அந்தப் படங்களுக்கும் பொதுமக்கள் அதிக விலை கொடுத்து தான் டிக்கெட் வாங்கினார்கள் என்றும், அப்போதெல்லாம் நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு தற்போது விஜய் படம் ரிலீஸ் ஆகும்போது மட்டும் இந்த நடவடிக்கையை எடுப்பது ஏன்? என விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்

More News

'பிகில்' படம் குறித்து இதுவரை வெளிவராத தகவல்!

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது

சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படத்தின் அசத்தலான அப்டேட்!

சிவகார்த்திகேயன் நடித்த 'நம்ம வீட்டு பிள்ளை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான நிலையில் தற்போது அவர் 'இரும்புத்திரை' இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கி வரும்

விஜய் படத்தை வகுப்பறையில் திரையிட்ட ஆசிரியர் சஸ்பெண்ட்!

தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் தீவிர முயற்சியால் தற்போது பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் கரும்பலகைக்கு பதில் கணினி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பிரபல நகைச்சுவை நடிகருக்கு டாக்டர் பட்டம்!

இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் இயக்கிய பொய்க்கால் குதிரை என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும்

உங்களுக்கு நான் என்ன துரோகம் செய்தேன்: மஞ்சுவாரியர் புகாருக்கு இயக்குனரின் உருக்கமான பதில்!

'அசுரன்' பட நாயகியும் பிரபல மலையாள நடிகையுமான மஞ்சுவாரியர், மலையாள இயக்குனர் ஸ்ரீகுமார் என்பவர் மீது போலீஸ் புகார் அளித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.