கமல் பல்டி அடிச்சாலும் அவர் நினைத்தது மட்டும் நடக்காது: அமைச்சர் ஜெயக்குமார்

  • IndiaGlitz, [Friday,October 04 2019]

கடந்த சில நாட்களாக அதிமுக அரசு குறித்து கமல் பேசுவதும், அதற்கு அதிமுக அமைச்சர்கள் பதிலடி தருவதும் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் கல்லூரி ஒன்றின் விழாவில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன், அதிமுக அரசையும் அரசியல்வாதிகளையும் அமைச்சர்களையும் கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் இந்த அரசு இந்த சமூகத்திற்கு தேவைதானா? என்ற ஒரு கேள்வியையும் அவர் எழுப்பினார். இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்த விமர்சனம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:

இந்த அரசு சமூகத்திற்கு தேவையான அரசா? இல்லையா? என்பதை கமல் தீர்மானம் செய்ய முடியாது. மக்கள் தான் தீர்மானம் செய்ய வேண்டும். இதுவரை தமிழக வரலாற்றில் அதிக முறை ஆட்சி செய்த கட்சி அதிமுக தான். எனவே கமல் என்ற ஒரு நடிகர் சொல்லிவிட்டால் அதனால் பெரிய தாக்கம் எதுவும் ஏற்படபோவதில்லை

மேலும் 'கமல் தோப்புக்கரணம் போட்டாலும் சரி, பல்டி அடிச்சாலும் சரி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது. அதிமுக அரசை எதிர்த்து கருத்து கூறினால் மட்டுமே கமல் அரசியல் செய்ய முடியும் என்பதால் அவர் இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்து வருகிறார்' என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

More News

பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து பிரபல நடிகர் திடீர் விலகல்

மணிரத்னம் இயக்கவுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் இந்தியாவின் முக்கிய நட்சத்திரங்கள் இணைந்துள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தொடங்கவுள்ளது

சாண்டியை உணர்ச்சிவசப்பட்டு அழவைத்த பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தந்த நிலையில் தற்போது நிகழ்ச்சி முடிவடையும் இறுதிக்கட்டத்தில் இருப்பதால்

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் அரவிந்தசாமி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை 'தலைவி' என்ற டைட்டிலில் இயக்குனர் விஜய் இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே.

மணிரத்னம் உள்பட 50 பேர் மீது தேசத்துரோக வழக்கு:

பிரதமர் மோடி தலைமையிலான அரசில் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மதத்தின் பெயரால் தாக்குதல் நடைபெற்று வருவதாகவும், இந்த தாக்குதல்களில் இருந்து நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும்

வெளியில வந்து எல்லாதையும் சொல்றேன்: அப்பாவை சமாதானம் செய்யும் லாஸ்லியா

பிக்பாஸ் வீட்டில் ஃபைனல் வரை வந்துவிட்ட லாஸ்லியா, இந்த சீசனின் டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கவினிடம் நெருக்கம் வேண்டாம் என அவரது தாய் மற்றும் தந்தை அறிவுரை கூறிவிட்டு