2021ம் ஆண்டு தேர்தலிலும் ரஜினி இதையேதான் கூறுவார்: அமைச்சர் ஜெயக்குமார்

  • IndiaGlitz, [Sunday,December 08 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் கடந்த 40 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தாலும், திரையுலகிலும் சரி அரசியலிலும் சரி இரு துருவங்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடந்த சில நாட்களாக இருவரும் இணைந்து அரசியலில் செயல்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இருவரும் கருத்து கூறிய போது தேவைப்பட்டால் இணைந்து செயல்படுவோம் என்று தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி போட்டியிட முடிவு செய்திருக்கிறது. இதனை அடுத்து கமல் கட்சியின் ரஜினி மக்கள் மன்றம் ஆதரவு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சற்று முன் வெளியான ஒரு அறிக்கையில் ரஜினி மக்கள் மன்றம் வரும் உள்ளாட்சித் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. இதனை அடுத்து கமல் கட்சிக்கு ரஜினி மக்கள் மன்றத்தின் ஆதரவு இல்லை என்று உறுதியாகி உள்ளது.

இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறிய தமிழக அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் ’உள்ளாட்சித் தேர்தலை ரஜினி புறக்கணிப்பது கமலுக்கு தான் நஷ்டம் என்றும் 2021 ஆம் ஆண்டு தேர்தலிலும் இதையையே தான் ரஜினிகாந்த் கூறுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

More News

தமிழக நலனுக்காக டேட்டிங் செய்ய போகிறேன்: பிக்பாஸ் நடிகை அறிவிப்பு

தமிழகத்தின் நலனுக்காக நடிகர் ஒருவருடன் டேட்டிங் செய்யப்போகிறேன் என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

'தர்பார்' பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த ராகவா லாரன்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ராகவா லாரன்ஸ் பேசிய போது சிறுவயதில் கமல் போஸ்டர் மீது சாணி அடித்ததாக தெரிவித்திருந்தார்

தெலுங்கானா என்கவுண்டருக்கு அஜித் ரசிகர்களின் வாழ்த்து போஸ்டர்

சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒருவர் நான்கு கயவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

இரண்டே வருடத்தில் முடித்த சபதம்: ரஜினிகாந்த்தின் உணர்ச்சிகரமான பேச்சு

பைரவி படத்திற்கு பின்னர் நான் ஒரு சில படங்களில் ஹீரோ மற்றும் வில்லனாக தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் போதே என்னை பட்டிதொட்டியெங்கும் சேர்த்த ஒரு படம்தான்

நீங்கள் என் மேல் வைத்த நம்பிக்கை வீண் போகாது: ரஜினிகாந்த்

இன்றைய தர்பார் இசை வெளியிட்டு விழாவில் தமிழகம் வந்த கதையை அடுத்து 'நம்பிக்கை' குறித்து ரஜினிகாந்த் பேசியதாவது: