close
Choose your channels

2021ம் ஆண்டு தேர்தலிலும் ரஜினி இதையேதான் கூறுவார்: அமைச்சர் ஜெயக்குமார்

Sunday, December 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் கடந்த 40 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தாலும், திரையுலகிலும் சரி அரசியலிலும் சரி இரு துருவங்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடந்த சில நாட்களாக இருவரும் இணைந்து அரசியலில் செயல்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இருவரும் கருத்து கூறிய போது தேவைப்பட்டால் இணைந்து செயல்படுவோம் என்று தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி போட்டியிட முடிவு செய்திருக்கிறது. இதனை அடுத்து கமல் கட்சியின் ரஜினி மக்கள் மன்றம் ஆதரவு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சற்று முன் வெளியான ஒரு அறிக்கையில் ரஜினி மக்கள் மன்றம் வரும் உள்ளாட்சித் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. இதனை அடுத்து கமல் கட்சிக்கு ரஜினி மக்கள் மன்றத்தின் ஆதரவு இல்லை என்று உறுதியாகி உள்ளது.

இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறிய தமிழக அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் ’உள்ளாட்சித் தேர்தலை ரஜினி புறக்கணிப்பது கமலுக்கு தான் நஷ்டம் என்றும் 2021 ஆம் ஆண்டு தேர்தலிலும் இதையையே தான் ரஜினிகாந்த் கூறுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos