close
Choose your channels

அரைவேக்காட்டுத்தனமாக பேசுகிறார் சூர்யா: அமைச்சர் கடம்பூர் ராஜூ காட்டம்

Monday, July 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சூர்யா நேற்று புதிய கல்விக்கொள்கை குறித்து மத்திய, மாநில அரசுகளை காட்டமாக விமர்சித்த நிலையில் ஏற்கனவே அவரை பாஜக தலைவர்களான எச்.ராஜா மற்றும் தமிழிசை செளந்திரராஜன் ஆகியோர் விமர்சனம் செய்தனர் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களும் சூர்யாவை காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யாவுக்கு என்ன தெரியும்? என்றும், நன்கு தெரிந்து கொண்டு பேசுபவர்களுக்கு பதில் கூறலாம், அரைவேக்காட்டுத்தனமாக பேசுபவர்களுக்கு எப்படி பதிலளிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

10 வருடங்களுக்கு மேலாக அகரம் பவுண்டேசன் மூலம் ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களை படிக்க வைத்த சூர்யாவுக்கு உங்களை விட நன்றாக கல்வி கொள்கைகள் பற்றி தெரியும் என்று அமைச்சருக்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். ஆனால் சூர்யாவின் தரப்பில் இருந்து இந்த விமர்சனங்களுக்கு எந்தவித பதிலும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.