close
Choose your channels

பால்கனி அரசு என விமர்சனம் செய்த கமலுக்கு அமைச்சர் பதிலடி

Wednesday, April 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில மாதங்களாகவே உலக நாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டரில் மத்திய, மாநில அரசுகளை சரமாரியாக விமர்சனம் செய்து வருகிறார். அவரது விமர்சனங்கள் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கமலுக்கு அவ்வப்போது பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று கமல்ஹாசன் தனது டுவிட்டரில், தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பாதிக்கும் எதையும் செய்ய கூடாது என்கிறார் பிரதமர்.ஆனால் மத்திய,மாநிலஅரசுகள் தனது ஊழியர்களின் அகவிலைப்படி ஏற்றத்தையும் ஈட்டிய விடுப்பையும் முடக்குகின்றன. தொழில்முனைவோரையும் தொழிலாளரையும் பாதுகாப்பதில் தெளிவான முடிவெடுக்கவேண்டும் பால்கனி அரசுகள்’ என்று விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்த பால்கனி அரசுகள் என்ற விமர்சனத்திற்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி கூறியபோது, ‘கமல்ஹாசன் பால்கனியில் இருந்து மக்களை பார்க்கிறார். நாங்கள் மக்களுடன் இருந்து பால்கனியை பார்க்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.