close
Choose your channels

விஜய் ரசிகர்களின் ரகளை குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து

Friday, October 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கிருஷ்ணகிரியில் விஜய் ரசிகர்கள் ஆர்வக் கோளாறால் ரகளையில் ஈடுபட்டதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகில் படத்தின் சிறப்புக்காட்சிக்கு நேற்றிரவு முதல்வரின் ஆலோசனையின் பேரில் சிறப்புக்காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு திரையரங்கில் பிகில் படத்தின் சிறப்புக் காட்சி ஒளிபரப்பவில்லை என விஜய் ரசிகர்கள் நள்ளிரவில் ரகளையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, விஜய், அஜித், ரஜினி என எந்த நடிகரின் ரசிகர்களாக இருந்தாலும் ஆர்வக் கோளாறில் இப்படி செய்கிறார்கள் என்று கூறினார்.

மேலும் சிறப்புக்காட்சி அனுமதி குறித்து அவர் கூறியபோது, ‘அரசு விதித்த நிபந்தனையை ஏற்றதால்தான் முதல்வரின் ஆலோசனையின் பேரில் பிகில் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.