close
Choose your channels

'மாஸ்டர்' ரிலீஸ் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ: விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி!

Wednesday, December 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது என்றும் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்றும் சமீபத்தில் தயாரிப்பாளர் உறுதிபடக் கூறி உள்ள நிலையில் தற்போது ’மாஸ்டர்’ ரிலீஸ் குறித்து பாசிட்டிவான கருத்தை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது

இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவியேற்பு விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் அளித்து வாழ்த்தினார்

அதன் பின்னர் அவர் பேசியபோது ’மாஸ்டர்’ திரைப்படம் வெளியாக வேண்டும் என்பதற்காக திரையரங்குகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். ஆனால் ’மாஸ்டர்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே தமிழகத்தில் கொரோனாவே இல்லாமல் போகும்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்

மேலும் தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மக்கள் முறையாக பின்பற்றினால் டிசம்பர் மாதத்திற்குள் தமிழகத்தை விட்டு கொரோனா ஓடிப் போகும் என்றும் அவர் குறிப்பிட்டார். ’மாஸ்டர்’ படம் குறித்த பாசிட்டிவான கருத்தை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் தெரிவித்துள்ளது கோலிவுட் திரையுலகினர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.