திரையரங்குகள் திறப்பு: மத்திய அரசின் அறிவிப்பு குறித்து கடம்பூர் ராஜூ கருத்து!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்தகட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இந்த ஊரடங்கில் அமல்படுத்தப்படும் தளர்வுகள் குறித்து தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. ஆனால் இந்த தளர்வில் திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது திரையரங்கு உரிமையாளர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஆனால் அதே நேரத்தில் நேற்று மத்திய அரசு வெளியிட்ட அடுத்தகட்ட ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளில் 50 சதவீத இருக்கைகளுடன் அக்டோபர் 15 முதல் நாடு முழுவதும் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்படுவதாக தெரிவித்திருந்தது. மாநில அரசு திரையரங்குகள் திறக்க அனுமதி தராத நிலையில் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

இந்த நிலையில் மத்திய அரசின் திரையரங்குகள் திறப்பது குறித்து அறிவிப்பு குறித்து தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் கூறியபோது ’திரையரங்குகளை 50% இருக்கைகளுடன் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி இந்த அறிவிப்பு தமிழகத்தில் செயல்படுத்தப்படும்’ என்று கூறினார். எனவே அக்டோபர் 15 முதல் தமிழகத்திலும் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

More News

வெற்றிமாறன் - கௌதம் மேனன் இணையும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

அமேசான் பிரைம் ஓடிடிக்காக தயாரான ஆந்தாலஜி திரைப்படம் ஒன்றின் டைட்டில் 'புத்தம் புது காலை' என்று வைக்கப்பட்டிருந்த செய்தி குறித்து நேற்று பார்த்தோம்.

நயன்தாராவுக்கு திமுகவின் உறுப்பினர் அட்டை: அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்!

கடந்த சில நாட்களாக ஆன்லைன் மூலம் திமுக-வில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஒரே நாளில் 72 லட்சம் பேர் திமுகவில் உறுப்பினராக இணைந்து உள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது 

தனுஷ்-சிம்பு பட தயாரிப்பாளர் மாரடைப்பல் மரணம்!

விக்ரம், தனுஷ், சிம்பு உள்பட பிரபல நடிகர்களின் திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் எஸ்கே கிருஷ்ணகாந்த்  திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தது தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

சம்பள விவகாரம்: விஜய் டிவியின் விளக்கத்திற்கு கஸ்தூரி பதில்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான சம்பளத்தை விஜய் டிவி நிர்வாகம் தனக்கு ஒரு வருடமாகியும் தரவில்லை என நடிகை கஸ்தூரி குற்றச்சாட்டு இருந்தார்.

கஸ்தூரி சம்பள பிரச்சனை: விஜய்டிவி நிர்வாகம் விளக்கம்

நடிகை கஸ்தூரி தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான சம்பளத்தை இன்னும் விஜய் டிவி தரவில்லை என தனது டுவிட்டரில் குற்றஞ்சாட்டியிருந்தார்.