தமிழகத்தில் உயரும் கருப்பு பூஞ்சை பாதிப்பு...! பாதுகாப்பாக இருங்க மக்களே....!

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எணிக்கை 256-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் சுமார் 256 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியிருப்பதாவது,

நம் மாநிலத்தில் 256 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அதை தடுக்க மருத்துவக்குழுவுடன் விரைவில் ஆலோசனை நடத்தவுள்ளோம். கொரோனா மூன்றாம் அலை ஏற்பட்டால், அதை தடுக்க மக்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருநெல்வேலியில் 500 படுக்கைகள் விரைவில் அமைக்க ஏற்பாடு செய்து தரப்படும். கொரோனா வைரஸ் மரணங்கள் குறித்து மறைக்கவேண்டாம் என அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தல் விடப்பட்டுள்ளது. கிரமப்புறங்களில் கொரோனா தொற்று பாதித்தவர்கள், மாவட்ட கட்டுப்பாட்டு அறைகள் மூலமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.

நேற்றளவில் நெல்லை மாவட்டத்தில் மட்டும், சுமார் 2800-க்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 75 லட்சம் மக்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். இங்கு கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

3.5 கோடி தடுப்பூசிகள் தமிழகத்திற்கு பெற உலகளாவிய டெண்டர் கேட்கப்பட்டுள்ளது. வரும் ஜூன்-6-ம் தேதி டெண்டர் திறக்கப்பட்டு தமிழகத்திற்கு விரைவில் கொரோனா தடுப்பூசி ஏற்பாடு செய்யப்படும் என அவர் கூறினார்.
 

More News

ரெக்கவர் செய்த ராஜகோபாலன் லேப்டாப்....! வெளியான அதிர்ச்சி தகவல்கள்...!

ராஜகோபாலன்  மாணவிகளிடம் எப்படி பாலியல் சீண்டல்களை தொடர்ந்தான் என்பது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிக்ஸர் அடித்த ஸ்டாலின்… ஊக்கத்தொகை அறிவிப்பு

தமிழக அரசு கொரோனா நேரத்தில் மக்கள் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ஊக்கத் தொகையை அறிவித்தது.

யார் இந்த நுங்கம்பாக்கம் வசந்தி? PSBB பள்ளி விவகாரம் குறித்து குட்டிபத்மினியின் வைரல் வீடியோ!

பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நடிகை குட்டிபத்மினி, நுங்கம்பாக்கம் வசந்தி குறித்து ஒரு தகவலை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'மகாநதி'யில் ஏற்பட்ட பதட்டம் இன்றும் குறையவில்லை: பத்மா சேஷாத்ரி விவகாரம் குறித்து கமல்

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த விவகாரம் குறித்து கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்து உள்ளார்கள்.

பத்திரிகை, ஊடகத்துறைக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை … முதல்வர் அறிவிப்பு!

முன்னதாக கொரோனா நேரத்தில் மக்களுக்காக சேவை ஆற்றும் மருத்துவர்கள்,