கொரோனா வந்தாலும் கமல்ஹாசன் நன்றாக இருப்பதற்கு இதுதான் காரணம்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

  • IndiaGlitz, [Saturday,November 27 2021]

கொரோனாவால் பாதிக்கப்பட்ட போதிலும் கமலஹாசன் நன்றாக இருக்கிறார் என்றால் அதற்கு இதுதான் காரணம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுவது குறித்தும் புதிதாக தோன்றி வரும் ஒமக்ரான் என்ற வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூறினார்.

மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ள கண்டிப்பாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்தினாலும் கொரோனா பாதிப்பு வரும் என்றும் ஆனால் அதே நேரத்தில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

உதாரணமாக கமல்ஹாசன் அவர்கள் இரண்டு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தியதால் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு வந்த போதிலும் அவர் நலமாக இருக்கிறார் என்றும் அவர் விரைவில் வீடு திரும்பவுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். எனவே தடுப்பூசி போடுவதன் விழிப்புணர்வை இன்னும் அதிகரிக்க இருப்பதாகவும் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த மக்கள் நல்வாழ்வு துறை முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

More News

புளூசட்டை மாறனின் 'ஆன்டி இண்டியன்' ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!

புளூசட்டை மாறன் இயக்கிய 'ஆன்டி இண்டியன்' என்ற திரைப்படம் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புளூசட்டை மாறன் கூறியிருப்பதாவது:

மருத்துவமனையில் இருந்து தொகுத்து வழங்கும் கமல்ஹாசன்: பிக்பாஸில் இன்னும் ஒரு ஆச்சரியம்!

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த ஐந்து சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தின் ஹீரோ இந்த இளம் நடிகரா?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று

'மாநாடு' படத்தின் இரண்டு நாள் வசூல் இத்தனை கோடியா? சுரேஷ் காமாட்சி தகவல்!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் ரிலீசுக்கு முன்னர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தது என்பதும் ஒரு கட்டத்தில் ரிலீசுக்கு முந்தைய தினத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைப்பதாக தயாரிப்பாளர்

2 மரங்களை 85 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய அம்பானி… என்ன ஸ்பெஷல் தெரியுமா?

இந்தியத் தொழில்துறையில் கொடிக்கட்டி பறந்துவரும் முகேஷ் அம்பானி 180