close
Choose your channels

கொரோனா வந்தாலும் கமல்ஹாசன் நன்றாக இருப்பதற்கு இதுதான் காரணம்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

Saturday, November 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனாவால் பாதிக்கப்பட்ட போதிலும் கமலஹாசன் நன்றாக இருக்கிறார் என்றால் அதற்கு இதுதான் காரணம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுவது குறித்தும் புதிதாக தோன்றி வரும் ஒமக்ரான் என்ற வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூறினார்.

மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ள கண்டிப்பாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்தினாலும் கொரோனா பாதிப்பு வரும் என்றும் ஆனால் அதே நேரத்தில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

உதாரணமாக கமல்ஹாசன் அவர்கள் இரண்டு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தியதால் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு வந்த போதிலும் அவர் நலமாக இருக்கிறார் என்றும் அவர் விரைவில் வீடு திரும்பவுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். எனவே தடுப்பூசி போடுவதன் விழிப்புணர்வை இன்னும் அதிகரிக்க இருப்பதாகவும் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த மக்கள் நல்வாழ்வு துறை முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.