'மாநாடு' படம் எப்போது ரிலீஸ் என்றே எனக்கு தெரியாது: அமைச்சர் மா சுப்பிரமணியன்

  • IndiaGlitz, [Thursday,November 25 2021]

சிம்பு நடித்த ’மாநாடு’ படத்திற்காகவே திரையரங்குகளில் தடுப்பு ஊசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியான நிலையில் ’மாநாடு’ திரைப்படம் ரிலீஸ் எப்போது என்று எனக்கு தெரியாது என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள், ‘மாநாடு படத்தின் தயாரிப்பாளர் எங்கள் திரைப்படம் தியேட்டரில் வருவதற்காகவே புது நிபந்தனை விதித்திருப்பதாக கூறினார். மேலும் வேறு எந்த ஊரிலாவது தடுப்பூசி போட்டால் தான் திரையரங்குகளில் அனுமதிக்கப்படும் என்ற சட்டம் இருக்கிறதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க், நியூஜெர்சி போன்ற நகரங்களில் உள்ள திரையரங்குகளில் 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டவர்கள் மட்டுமே திரையரங்குகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்பது அந்த தயாரிப்பாளருக்கு தெரியுமா? தெரியாதா? என்று எனக்கு தெரியவில்லை.

மேலும் ஒட்டுமொத்த பொதுமக்களை காக்க வேண்டும் என்பதற்கான அரசு இது. ஒரு திரைப்படத்திற்காகவோ, ஏதோ ஒரு படம் ரிலீஸ் ஆவதற்காகவோ இவ்வாறு நிபந்தனை விதிக்கப்படுவது இல்லை. மாநாடு படம் எப்போது ரிலீஸ் என்றே எங்களுக்கு தெரியாது. எனவே தேவை இல்லாத செய்திகளை வெளியே பரப்ப வேண்டாம் என்று ஒரு சமூக அக்கறையோடு அவர்களையும் நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்’ என்று அமைச்சர் கூறியுள்ளார்.

More News

'மாநாடு' ரிலீசுக்கு கடைசி நேரத்தில் உதவி செய்தவர் இவரா? வைரலாகும் டுவிட்!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி இன்று ரிலீஸ் ஆகியது என்பதும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பதும் தெரிந்ததே.

இப்ப சொல்லுங்க, நான் பண்ணினது தப்பா சார்? டுவிட்டரில் கேள்வி எழுப்பிய சிவகார்த்திகேயன்!

சிம்புவின் 'மாநாடு' திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன் பதிவு செய்த டுவிட்டில், 'இப்ப சொல்லுங்க, நான் பண்ணினது தப்பா சார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

சூப்பர் ஹீரோ, புரியாத புதிர், ஆட்டோ மீட்டர்: போட்டியாளர்கள் குறித்து சஞ்சீவ் கணிப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆகி உள்ள சஞ்சீவ் சக போட்டியாளர்கள் கணிப்பு குறித்து கூறும் காட்சிகள் இன்றைய அடுத்த புரோமோ வீடியோவில் உள்ளது.

விஜய் பிக்பாஸ் நிகழ்ச்சியை பாக்குறாரா? உள்ளே வந்த போட்டியாளரிடம் சிபி கேள்வி!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 53 நாட்களாக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது தான் நிகழ்ச்சி மிகவும் சுவராசியமாக சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது 

கொட்டும் லஞ்சப்பணம்… கழிவுநீர் குழாயில் கரன்சி நோட்டுகளை பதுக்கிய சம்பவம்!

கர்நாடக மாநிலத்தில் உயர் அதிகாரி ஒருவர் தான் வாங்கிய லஞ்சப்பணத்தை கழிவுநீர் குழாயில் பதுக்கி வைத்துள்ளார்.