close
Choose your channels

நடிகை மீனா கணவர் உயிரிழப்புக்கு காரணம் என்ன? அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்

Wednesday, June 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக காலமான நிலையில் அவரது மரணத்திற்கு என்ன காரணம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் விளக்கியுள்ளார்.

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவால் உயிரிழந்தார் என்று கூறப்படுவது முற்றிலும் தவறு என்றும் அவர் கடந்த டிசம்பர் மாதம் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டிலேயே ஆக்சிஜன் உதவியுடன் தான் சிகிச்சை பெற்று வந்தார் என்றும் அதன்பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 6 மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்றும் கூறினார்.

வித்யாசாகருக்கு இருதயம், நுரையீரல் ஆகிய இரண்டு உறுப்புகளும் செயலிழந்து விட்டது என்றும் 95 நாட்கள் எக்மோ சிகிச்சைப் பிரிவில் இருந்த அவரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் நான் மருத்துவமனையில் சென்று பார்த்தேன் என்றும் அப்போதும் அவர் சுய நினைவில்லாமல் தான் இருந்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

அவருக்கு நுரையீரல் தானமாகக் கிடைக்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் நடவடிக்கை எடுத்த போதிலும் அவருடைய துரதிருஷ்டம் எந்த ஊரில் இருந்தும் உறுப்புகள் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.

மேலும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்றும் தற்போது அவர் கொரோனாவால் உயிரிழந்தார் என்று கூறப்படுவது தவறான தகவல் என்றும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.