close
Choose your channels

நடிகர் வடிவேலுவுக்கு ஒமிக்ரான் தொற்றா? அமைச்சரின் அதிர்ச்சி தகவல்!

Monday, December 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவருக்கும் ஒமிக்ரான் பரவி இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் வடிவேலு, இயக்குனர் சுராஜ் உள்பட ஒருசிலர் சமீபத்தில் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற திரைப்படத்தின் பணிகளுக்காக லண்டன் சென்றார்கள் என்பதும் அங்கிருந்து திரும்பிய வடிவேலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் வடிவேலுவை அடுத்து இயக்குனர் சுராஜ் அவர்களுக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது. இந்த நிலையில் நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக இருப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் வடிவேலுவுக்கும் இயக்குனர் சுராஜ்க்கும் ஒமிக்ரான் வைரஸ் பரவி இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் வடிவேலுவின் பரிசோதனை முடிவுகள் வெளிவந்த பிறகே அவருக்கு ஒமிக்ரான் தொற்று பரவி இருக்கிறதா என்பது உறுதி செய்யப்படும் என்பது குறிபிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.