close
Choose your channels

வடிவேலுவுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பாதிப்பா? அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்

Saturday, December 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வைகைப்புயல் வடிவேலு அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னை போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வைகைப்புயல் வடிவேலு, இயக்குனர் சுராஜ் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் சமீபத்தில் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற படத்தின் பணிகளுக்காக லண்டன் சென்றார்கள் என்பதும் லண்டனில் இருந்து திரும்பி வந்த வடிவேலுவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து நடிகர் வடிவேலு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் வடிவேலு உடல்நிலை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் கூறிய போது, ‘நடிகர் வடிவேலு உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்றும் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் கூறினார். மேலும் வடிவேலுவுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்ததில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகிய இருவருக்கும் மரபணு மாற்றம் இருப்பது தெரியவந்துள்ளதாகவும் அதுமட்டுமின்றி வடிவேலுக்கு முதல் நிலை அறிகுறி மற்றும் எஸ்-டிராப் அறிகுறி இருக்கும் காரணத்தினால் பரிசோதனைக்கு அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.