close
Choose your channels

சிறையில் சொகுசாக இருந்த மாஜி அமைச்சர்...! அதிரடி காட்டிய போலீஸ்....!

Tuesday, June 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சைதாப்பேட்டையில் உள்ள கிளைச் சிறையில் மாஜி அமைச்சர் மணிகண்டன் சொகுசு வசதிகளோடு இருந்ததாக கூறப்பட்ட நிலையில், காவல் துறையினர் அவரை புழல் சிறைக்கு மாற்றியுள்ளனர்.

தன்னை திருமணம் செய்வதுகொள்வதாக கூறி, மூன்று முறை கருக்கலைப்பு செய்து ஏமாற்றிவிட்டார் மாஜி அமைச்சர் மணிகண்டன் என நடிகை சாந்தினி காவல்நிலையத்தில் புகாரளித்தார். நடிகை அளித்த புகாரின்பேரில் பெங்களூரில் தலைமறைவாகி இருந்த மணிகண்டனை, காவல் துறையினர் கைது செய்து, சைதாப்பேட்டை கிளைச்சிறையில் அடைத்தனர். ஆனால் அங்கு சில அதிகாரிகளின் உதவியுடன் சோபா, ஏசி, செல்போன், சார்ஜர் என மணிகண்டன் சொகுசு வசதிகளோடு இருந்துள்ளார். இதை ஆதாரங்களுடன் கண்டுபிடித்தவர்கள், ரகசிய தகவலை டிஎஸ்பி-க்கு அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் டிஎஸ்பி தலைமையில் குழு ஒன்று திடீரென சைதாப்பேட்டை கிளைச் சிறையில் ஆய்வு நடத்தியது. அதில் மேற்கூறிய வசதிகளுடன் மணிகண்டன் இருப்பதை புகைப்பட ஆதாரங்களுடன் கண்டுபிடித்து, காவல்துறையினர் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இதன்பின் புழல் சிறைக்கு மணிகண்டன் மாற்றப்பட்டுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.