குழந்தைகளுக்கு லாலிபாப் வாங்க நினைத்த அமைச்சரின் பதவி பறிபோனது!!! காரணம் என்ன தெரியுமா???

  • IndiaGlitz, [Saturday,June 06 2020]

 

மடகாஸ்கரில் கோவிட் ஆர்கானிக் என்ற மூலிகை மருந்து கொரோனா நோய்த் தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தப் பட்டு வருகிறது. இந்த மருந்தை அந்நாட்டின் அதிபர் ஆண்டரி ராஜோலினா நேரடியாக குடித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அதைத் தொடர்ந்து பல ஆப்பிரிக்கா நாடுகளுக்கும் கோவிட் ஆர்கானிக் மூலிகை மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் உலகச் சுகாதார அமைப்பின் ஒப்புதலைப் பெறவும் விண்ணப்பிக்கப் பட்டுள்ளது. ஆர்ட்டெமிசியா என்ற மூலிகைத் தாவரத்தைப் பதப்படுத்தி கோவிட் ஆர்கானிக் தயாரிக்கப் படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாட்டில் உள்ள அனைவருக்கும் தற்போது இந்த மருந்து கொடுக்கப் பட்டு வருகிறது. முக்கியமாக பள்ளிகள் கல்லூரிகள் போன்ற இடங்களில் கட்டயாமாக்கப் பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதலே இத்தகைய செயல்திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது. இந்த மருந்தின் பயன்பாட்டால் அந்நாட்டில் ஓரளவிற்கு கொரோனா கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் கோவிட் ஆர்கானிக் மூலிகை மருந்துக்கு இதுவரை உலகச் சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளிக்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆதோடு இந்த மருந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் என்ற சந்தேகத்தையும் சிலர் வெளிப்படுத்தி வருகின்றனர். நாட்டின் பெரும்பாலானவர்களுக்கு இந்த மருந்து வழங்கப்பட்டு வருவதால் தற்போது மடகாஸ்கரில் முழுவதுமாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு விட்டது.

இந்நிலையில் மடகாஸ்கர் நாட்டின் கல்வித் துறை அமைச்சராக இருக்கும் ரிஜசோவா அன்ரியாமன்னா பள்ளிக் குழந்தைகள் கோவிட் ஆர்கானிக் மூலிகை மருந்தைக் குடிக்கும்போது கசப்பாக இருக்கும். எனவே மருந்தைக் குடிக்கம் ஒவ்வொரு மாணவருக்கும் தலா 3 லாலிபாப் மிட்டாய்களைக் கொடுக்கலாம் என்ற புதுத் திட்டத்தைச் செயல்படுத்த நினைத்திருக்கிறார். இத்திட்டம் முறையாக ஒப்புதல் பெறப்படவில்லை என்றும் அதிபருக்கு அறிவிக்கப்படவில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் கல்வி அமைச்சர் லாலிபாப்களை வாங்குவதற்கு செலவு செய்ய இருந்த பணத்தின் அளவு அதிகமாக இருந்தது என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது. 2 மில்லியன் அமெரிக்க டாலரை இத்திட்டத்திற்கு கல்வி அமைச்சர் ஒதுக்கி இருந்தார். இந்திய ரூபாயில் இது 14 கோடி ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

நயன்தாரா - ரம்யா கிருஷ்ணன்: அம்மன் வேடத்தில் பெஸ்ட் யார்? 

தமிழ் சினிமாவில் இதுவரை பல அம்மன் திரைப்படங்கள் வந்துள்ளன என்பதும் அவற்றில் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன என்பதும் தெரிந்ததே.

வித்தியாசமான முறையில் பீட்டாவிற்கு விளம்பரம் செய்த ரகுல் ப்ரித்திசிங்

சூர்யா நடித்த 'என்ஜிகே', கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று', 'தேவ்' உள்பட ஒருசில தமிழ் படங்களிலும், பல தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங்.

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் ரீஎன்ட்ரி ஆகும் ரோஜா: பரபரப்பு தகவல் 

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பெரும்பாலான திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வந்தாலும் 'விக்ரம் வேதா', 'பேட்ட', 'மாஸ்டர்' உட்பட ஒரு சில படங்களில் வில்லனாக நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.

'தளபதி 65' படத்தில் விஜய்சேதுபதி பட நாயகி?

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் ஊரடங்கு உத்தரவு மற்றும் கொரோனா பரபரப்பு முடிந்த பின்னர் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது

உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள்: போர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய நடிகர் !!!

உலகப் பிரபலங்களில் யார் அதிகச் சம்பளம் வாங்குகிறார்கள் என்ற பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் போப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு வருகிறது.