close
Choose your channels

கமல் கட்சியை வளரவிடுவது தமிழகத்துக்கு ஆபத்து: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Tuesday, October 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனை தினமும் ஒரு தமிழக அமைச்சர் விமர்சனம் செய்வதும், அவர்களுக்கு கமல்ஹாசன் பதிலடி கொடுப்பதும் கடந்த சில மாதங்களாக வழக்கமாக நிகழ்ந்து வரும் நிகழ்வாக உள்ளது. அந்த வகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:

நடிகர் கமல்ஹாசன் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை. அது வளர்ந்தால் தமிழகத்திற்கும் தமிழ் மக்களுக்கும் பெரும் ஆபத்து. எம்.ஜி.ஆர். மக்களோடு இருந்து மாளிகையை பார்த்தவர். ஆனால் கமல் மாளிகையில் இருந்து கொண்டு மக்களை பார்க்கிறார். தமிழகத்தை காக்க வந்த ரட்சகர் போல கமல் நாடகம் ஆடுகிறார். அது தேர்தலுக்கு ஒத்துவராது. கமல் கட்சி கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாது என்றும் கூறினார்.

அதே நேரத்தில் ரஜினிகாந்த் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திரன், 'ரஜினி ஆன்மீகத்தை சார்ந்தவர். நல்ல மனிதர் என்று கூறினார்.

அமைச்சரின் இந்த கருத்து குறித்து கமல்ஹாசன் கூறியபோது, 'கரு கலைக்கப்பட வேண்டும் என அமைச்சர் கூறி உள்ளார். அது பெண்களுக்கு பிடிக்காது. ராஜேந்திர பாலாஜி ஒரு தீய சக்தி என கூறினார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.