அமைச்சர் சேகர் பாபுவிடம் இருந்து வந்த போன்.. பயந்த இயக்குனர்.. அதன்பின் நடந்தது என்ன? ஜெயம் ரவி பேச்சு


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் ரவி மோகன் நடித்த ’கராத்தே பாபு’ என்ற படத்தின் டீசர் கடந்த ஜனவரி மாதம் வெளியான நிலையில், இந்த டீசர் வெளியானவுடன் அமைச்சர் சேகர்பாபு அவர்களிடம் இருந்து போன் வந்தது என்றும், அப்போது அவர் சொன்ன தகவல் எங்களை ஆச்சரியப்படுத்தியது என்றும் ரவி மோகன் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.
‘டாடா’ படத்தின் இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் உருவான ’கராத்தே பாபு’ என்ற படத்தின் இரண்டு நிமிட டீசர் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. முதலமைச்சர் கேரக்டரில் நாசர், எதிர்க்கட்சித் தலைவர் கேரக்டரில் கே.எஸ். ரவிக்குமார் நடித்திருந்தனர். ரவி மோகன் எம்.எல்.ஏ. கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களில் அமைச்சர் சேகர்பாபு அவர்களிடமிருந்து போன் வந்தது என்றும், அப்போது "இந்த படம் என்னைப் பற்றிய கதை மாதிரி இருக்கிறது" என்று இயக்குனரிடம் கேள்வி கேட்டதாகவும் ஜெயம் ரவி கூறினார். ஆனால் இயக்குனர் பயந்து கொண்டே, "அப்படி எல்லாம் இல்லை சார், இதில் உங்களைப் பற்றிய எந்த சம்பவமும் இல்லை, இது கராத்தே பாபு படம்" என்று சொல்ல, "தம்பி, அந்த கராத்தே பாபு நான் தான்" என்று சேகர் பாபு ஐயா சொன்னதும் எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது என்று ரவி மோகன் தெரிவித்தார்.
ரவி மோகன் இதை பேசும் போது, அதே மேடையில் அமைச்சர் சேகர் பாபு உட்கார்ந்து அதைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com