close
Choose your channels

தர்பாருக்காக ரஜினி அப்படி பேசியிருக்கலாம்: தமிழக அமைச்சர்

Saturday, November 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று பேட்டி அளித்த போது ’தமிழகத்தில் இன்னும் ஆளுமை உள்ள சரியான தலைவர்கள் இல்லை’ என்று அழுத்தமாகக் கூறினார். ரஜினியின் இந்த கருத்து தற்போதைய முக்கிய தலைவர்களாக இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆகியோர்களை அதிருப்தி அடைய செய்ததாக தெரிகிறது.

ரஜினியின் என்ற கருத்துக்கு நேற்றே மறைமுகமாக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒரு நிகழ்ச்சியின் பதிலடி கொடுத்தார். ’வீட்டில் பேட்டி கொடுப்பவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகி முடியாது என்றும், 60 ஆண்டுகள் வேறொரு தொழிலில் இருந்துவிட்டு தற்போது அரசியலில் நுழைந்து உடனே பதவியை பிடித்துவிடலாம் என்று நினைக்கின்றார்கள். அவரகள் நினைப்பது போல் அரசியல் என்பது தொழில் அல்ல, சேவை என்றும் அவர் கூறியிருந்தார்.

அதேபோல் தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்றும் அந்த வெற்றிடம் ஸ்டாலின் என்ற காற்றால் நிரப்பப்பட்டுவிட்டது என்றும் திமுக தரப்பில் இருந்து துரைமுருகன் அவர்கள் விளக்கமளித்து இருந்தார். இந்த நிலையில் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் ரஜினியின் ‘வெற்றிடம் குறித்த கருத்து குறித்து கூறியபோது, ‘தமிழகத்தில் தற்போது வெற்றிடம் இல்லை. ரஜினிகாந்த் அவர்கள் தனது படம் வெளியாகும் போதெல்லாம் ஏதாவது பரபரப்புக்கு இப்படி பேசுவது வழக்கமான ஒன்றுதான். இந்த நிலையில் தற்போது ’தர்பார்’ உள்ளிட்ட அவர் நடித்த இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளதால் அவர் இதுமாதிரி பேசி இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.