close
Choose your channels

சூர்யாவுக்கு மனிதநேயமே இல்லை என்று சந்தேகப்பட்டேன்: அமைச்சர் செங்கோட்டையன்

Monday, January 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யாவின் அகரம் அறக்கட்டளை சார்பில் நேற்று சென்னையில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது என்பதையும், இந்த விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் சூரி உள்பட பலர் கலந்து கொண்டார்கள் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த விழாவில் காயத்ரி என்ற மாணவி, தான் வறுமையில் மிகவும் வாடியதாகவும் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை உதவியால்தான் தான் படித்து தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவும் நெகழ்ச்சியுடன் தெரிவித்தது சூர்யாவின் கண்களை கலங்க செய்தது என்பது சற்று முன்னர் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது ’சூர்யாவின் படங்களைப் பார்த்தபோது அவர் வில்லன்களை அடிப்பதை பார்த்து சூர்யாவுக்கு மனிதநேயமே இல்லை என்று நான் நினைத்தேன். ஆனால் தற்போது தான் தெரிகிறது அவர் அகரம் என்ற அறக்கட்டளை மூலம் எவ்வளவு பெரிய உதவிகளை செய்து வருகிறார் என்பது. காயத்ரி என்ற மாணவி கண்கலங்கியபோது சூர்யா நேராக மேடைக்கு சென்று அவரை தட்டிக்கொடுத்தபோது அவரது மனிதநேயத்தை நேரில் பார்த்தேன்.

இதுபோன்ற நபர்கள் செய்யும் உதவியினால் தான் கல்வி முன்னேற்றம் அடைய முடியும். சூர்யா அவர்களின் பணிகள் மென்மேலும் வளர எனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்’ என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.