தனிமைப்படுத்தப்பட்டுள்ள பயணிகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வந்த பயணிகள் பலருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும் 14 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் பலர் இதனை கடைபிடித்ததாக தெரியவில்லை.

இந்த நிலையில் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்திய சிலர் வீட்டில் இருக்காமல் வெளியே சென்று வருகின்றனர் என்றும் அதிருப்தி தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், வீடுகளில் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்ட பயணிகள் அரசின் அறிவுரையை மீறி வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

இதே போல் பிரதமர் மோடியும், கொரோனா நிலைமையை மக்கள் இன்னும் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் மக்கள் அதனை பொருட்படுத்தாமல் அலட்சியமாக உள்ளதாகவும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள நகரங்களில் விதிகள், சட்டங்களை கடுமையாக மக்கள் பின்பற்றுவதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மத்திய, மாநில அரசுகள் என்னதான் தீவிர நடவடிக்கை எடுத்தாலும் பொதுமக்கள் சுயகட்டுப்பாடு இல்லை என்றால் அரசு எடுத்த நடவடிக்கை அனைத்தும் வீணாகும் என்பதை அனைவரும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
 

More News

இந்தியா முழுவதும் 80 மாவட்டங்கள் 31 ஆம்தேதி வரை முடக்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பு!!!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நேற்று ஒருநாள் மட்டும் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டு அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.  அதேபோல

மருத்துவர்களுக்கு கைதட்டி நன்றி தெரிவித்த விக்கி-நயன் ஜோடி!

கோலிவுட் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில் இந்த ஆண்டு இருவருக்கும் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9ஆக உயர்வு

கொரோனாவால் தமிழகத்தில் 9 பேர் இதுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஒன்பது பேர்களும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்

'தலைவா' என அழைத்து ரஜினிக்கு நன்றி கூறிய 'டுவிட்டர் இந்தியா'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று முன் தினம் பதிவு செய்த கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோவுக்கு ஏகப்பட்ட புகார் வந்ததால், டுவிட்டர் இந்தியா

இந்த மாதிரி ஆளுங்களை வச்சுகிட்டு கொரோனாவை எப்படி ஒழிக்க முடியும்?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி மனித இனத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு மிக எளிதாக பரவும்