தமிழகத்தில் கொரோனா பாதித்த ஐவர் குறித்த தகவல்: அமைச்சர் விஜயபாஸ்கர் 

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 57 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் செய்தியின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் பலர் இன்னும் மீண்டு வரவில்லை. இதில் நேற்று இரவு மட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 50 பேர் கண்டறியப்பட்டனர். இவர்களில் 45 பேர் டெல்லி மத மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் என்ற நிலையில் மீதமுள்ள ஐவர் குறித்த தகவலை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள தகவலின்படி சென்னை விமான நிலையத்தில் பணிபுரியும் கன்னியாகுமரியை சேர்ந்த 35 வயது ஆண் ஒருவருக்கும், சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த 61 வயது நபர் ஒருவருக்கும், கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து இவர்கள் மூவரும் சென்னை மற்றும் குமரி அரசு மருத்துவமனையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த 85 வயது நபர் ஒருவருக்கும், சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள கழிப்பட்டூர் என்ற பகுதியை சேர்ந்த 54 வயது நபருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

More News

டெல்லி மத மாநாடு: நிஜாமுதீன் மவுலானா மீது எஃப்ஐஆர்

கடந்த மார்ச் 13 முதல் மார்ச் 15 வரை டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மத வழிபாடு மாநாடு நடந்த நிலையில் இதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானோர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்துள்ளது

தமிழகத்தில் மேலும் 50 பேர்களுக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 124 ஆனதால் அதிர்ச்சி

இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்தாலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது 

கணவனை கொலை செய்த மனைவிக்கு ஜாமீன்: தொலைபேசியில் விசாரணை செய்த நீதிபதி

கணவனை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனைவிக்கு  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தொலைபேசியிலேயே விசாரணை செய்து ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார் 

கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் அடித்து கொலை: ஒரு அதிர்ச்சி சம்பவம்

கொரோனா வைரஸ் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் உடனடியாக சுகாதாரத் துறைக்கு

மகனுக்கு வித்தியாசமாக முடிவெட்டிய பிரபல இயக்குனர்

ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்னர் அத்தியாவசிய பொருட்களை மக்கள் வாங்குகிறார்களோ இல்லையோ முதல் வேலையாக அனைவரும் சலூன் முன் நிற்பார்கள். 21 நாட்கள் முடிவெட்டாமல்