close
Choose your channels

சென்னையில் 2வது நபருக்கு கொரோனா! உறுதி செய்த அமைச்சர் விஜயபாஸ்கர்

Wednesday, March 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டெல்லியில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே தமிழகத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு பின்னர் குணமடைந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அவருக்கு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவ நிபுணர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை அவ்வப்போது கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள் என்றும் தேவையற்ற பயணங்கள், பொது இடங்களில் கூடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.