விடுமுறையல்ல இது.. ஆபத்து.. என்ன சொன்னாலும் மக்கள் புரிந்து கொள்ளவில்லை..! விஜய பாஸ்கர்.

கொரோனா பாதிப்பு குறித்து எவ்வளவு சொன்னாலும் அதில் உள்ள ஆபத்தினை மக்கள் புரிந்து கொள்ளாதது வருத்தமளிக்கிறது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுதும் பரவியுள்ள கொரோனா வைரஸானது மக்களிடையே மிகவும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கிட்டத்தட்ட 258 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 5 பேர் வரை உயிரிழந்துள்ளனர். தமிழக அரசானது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 நாட்கள் மக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என கூறியிருந்தது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. ஐ.டி போன்ற தொழில் நிறுவனங்களானது தங்களது பணியாளர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் தமிழக மக்கள் இந்த ஆபத்தினை புரிந்துகொள்ளவில்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். வீட்டிலேயே இருக்க வேண்டும் என விடுமுறை அளித்தால் மக்கள் கூட்டம் கூட்டமாக சுற்றுலா போல குடும்பத்துடன் வெளியில் சுற்றி வருகின்றனர். இத்தாலியிலும் இதே போலத்தான் மக்கள் இதை சாதாரண காய்ச்சலாக நினைத்தனர். ஆனால் 2 வாரங்கள் கழித்து கொரோனா தனது கோர முகத்தை காட்டத் தொடங்கியது. இன்று சிகிச்சை அளிக்க வழியில்லாமல் மக்கள் இறப்பதை அந்த அரசு தடுக்க எவ்வளவோ முயற்சி செய்து வருகிறது.

அங்கு நடப்பது போல இந்தியாவிலும் நடக்காமல் தடுக்க மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளினைக் கவனமாக கைக்கொள்ள வேண்டும்.

More News

கொரோனாவில் இருந்து தப்பிக்க பொருட்களை எப்படி கையாள்வது???

கொரோனா வைரஸ் பொருட்களின்மீது பல மணிநேரம் குடியிருக்கும் தன்மையுடையது என ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன.  

தண்டவாளத்தில் படுத்து செல்பி எடுத்த காதலர்கள்: அடுத்த நிமிடம் தற்கொலை

ரயில் தண்டவாளத்தில் படுத்தபடியே செல்பி எடுத்துக் கொண்ட காதலர்கள் அடுத்த நிமிடம் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆம்பூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இதுதான் கொரோனா வைரஸ் சோதனை செய்யும் லட்சணமா? சஸ்பெண்ட் ஆன அதிகாரி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த

கொரோனா வைரஸ் குறித்து 'மாஸ்டர்' நடிகரின் விழிப்புணர்வு வீடியோ

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை திரையுலகை சேர்ந்த பலர் பதிவு செய்து வரும் நிலையில் 'மாஸ்டர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த் சாந்தனு

நம் எதிரே இரு அறைகூவல்: கொரோனா குறித்து வைரமுத்து

உலகமெங்கும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இன்று வரை கொரோனா வைரஸுக்கு 258 பேர் பாதித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.