close
Choose your channels

மழைபெய்ய வேண்டி… சிறுமிகளுக்கு நிர்வாண பூஜை நடத்தும் கிராம மக்கள்!

Wednesday, September 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மூடநம்பிக்கையில் சிக்கித் தவிக்கும் ஒருசிலர் இன்றைக்கும் மழைக்கடவுளை மகிழ்விக்க வேண்டி சில விபரீதமான சடங்குகளை செய்வதைப் பார்த்திருப்போம். அதில் கழுதைக்கு கல்யாணம் செய்வது, நாய்க்கு கல்யாணம் செய்வது என்று எத்தனையோ விசித்திரம். ஆனால் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இளம்பெண்களை நிர்வாணப்படுத்தி மழைக் கடவுளுக்கு பூஜை செய்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகரிகம் எவ்வளவோ வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் மழை கடவுளை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக புந்தேல்கண்ட் மாவட்டத்தில் உள்ள தாமோ பகுதிக்குட்பட்ட பனியா எனும் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் 6 சிறுமிகளை நிர்வாணப்படுத்தி பூஜை நடத்தியுள்ளனர். போலீசாருக்கு இந்தத் தகவல் கிடைத்து விசாரணை நடத்தி இருக்கின்றனர். ஆனால் மழைக்காக சடங்கு நடத்தினோம் என்று கிராம மக்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் இந்தச் சம்பவம் குறித்து எந்த புகாரும் பதிவு செய்யப்படாததால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து பேசிய அதிகாரிகள் சிலர் அவர்களுடைய நம்பிக்கை அப்படி இருக்கிறது. விழிப்புணர்வு பெறாத வரை ஒன்றுமே செய்ய முடியாது என்று வருத்தம் தெரிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தச் சம்பவம் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களாக சோஷியல் மீடியாவில் கவனம் பெற்ற இந்தச் சம்பவம் பரவலான விவாதத்தை ஏற்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.