விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் உடல்நிலை: மருத்துவமனை அறிக்கை

  • IndiaGlitz, [Tuesday,September 29 2020]

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவருடைய மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவரும் சமீபத்தில் கொரனோ தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தேமுதிக பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் செப்டம்பர் 28ஆம் தேதி கோவிட் பரிசோதனைக்கு உட்பட்டு, நோய்த்தொற்று உறுதியாகி, சென்னை மியாட் மருத்துவமனையில் செப்டம்பர் 29ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை சீராக உள்ளது.

மருத்துவ குழுவின் கண்காணிப்பில் உள்ள திருமதி பிரேமலதா விஜயகாந்தின் முதல்நிலை பரிசோதனைக்குப் பின் தேமுதிக தலைவர் மற்றும் கழக பொதுச் செயலாளருமான விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அவரின் உடல்நிலை சீராக உள்ளது. நோய் தொற்றுக்கான அறிகுறி இல்லை. தொடர் மருத்துவ சேவையினால் அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து இருக்கிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவரது உடல்நிலையும் தேறி வருவதாக வெளிவந்துள்ள தகவல் அக்கட்சியின் தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

More News

கொரோனா நோயாளிகளைத் துரத்தும் இன்னொரு அதிபயங்கரம்… அதிர்ச்சி தகவல்!!!

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு பல உடல் உறுப்புகள் பாதிப்பு அடைவதை ஏற்கனவே மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

கடலூரில் அடித்து நவுத்திய பேய்மழை… மின்னல் தாக்கி அக்கா-தம்பி இருவரும் உயிரிழந்த பரிதாபம்!!!

கடலூரில் நேற்று காலை முதல் மதியம் வரை கனமழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

இவர்கள் தான் பிக்பாஸ் போட்டியாளர்களா? லீக்கான இறுதி பட்டியல்!

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வரும் அக்டோபர் நான்காம் தேதி முதல் தொடங்க உள்ளது என்பது உறுதிசெய்யப்பட்டது.

3 வயது குழந்தைக்கு பேய்ப்பிடித்து இருப்பதாக் கூறி அடித்தே கொன்ற பூசாரி!!! கொடூரச் சம்பவம்!!!

21 ஆம் நூற்றாண்டிலும் உடல்நிலை சரியில்லாமல் போனால் அதற்கு பேய்தான் காரணம் என நம்பும் பழக்கம் சிலரிடம் இருக்கத்தான் செய்கிறது.

13 நாட்களில் அடுத்த படத்தின் கதை ரெடி: பிரபல இயக்குனர் தகவல் 

பார்த்திபன், தேவயானி, நந்திதா தாஸ் நடித்த 'அழகி' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் 'சொல்ல மறந்த கதை', 'தென்றல்', 'பள்ளிக்கூடம்', 'ஒன்பது ரூபாய் நோட்டு'