close
Choose your channels

இறந்து அழுகிய நிலையில், சடலமாக மீட்கப்பட்ட இளம் நடிகர்… திரையுலகினர் அதிர்ச்சி!

Saturday, December 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

36 வயதான பாலிவுட் இளம் நடிகர் பிரம்மா மிஸ்ரா அவருடைய குடியிருப்பில் இறந்து அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்படடு உள்ளார். இந்தத் தகவல் ஒட்டுமொத்த இந்தி சினிமா ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டில் வெளியான “மிர்சாபூர்“ எனும் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் பிரம்மா மிஸ்ரா. அதைத்தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற ஒருவராகவும் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மும்பையில் உள்ள வெர்சோவா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த இவர் தற்போது பூட்டிய வீட்டிற்குள் இருந்து உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு உள்ளார்.

இதையடுத்து பிரம்மா மிஸ்ராவின் உடல் ஜுஹுவில் கூப்பர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அந்த சோதனையில் இவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளார். மேலும் பிரம்மா மிஸ்ரா கடந்த நவம்பர் 29 ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக மருத்துவரை அணுகியதாகவும் அப்போது மருத்துவர்கள் பரிந்துரைத்த சில மருந்துகளை அவர் எடுத்துக்கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து வீட்டில் தனியாக வசித்துவந்த பிரம்மா மிஸ்ரா கழிவறைக்கு சென்றபோது மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். 3 நாட்கள் கழித்து பூட்டிய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுக்க, தற்போது நடிகர் பிரம்மா மிஸ்ரா உயிரிழந்தது தெரியவந்துள்ளது. 36 வயதான இளம் நடிகரின் திடீர் தற்போது பாலிவுட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.