close
Choose your channels

தமிழ் நடிகைக்கு வழங்கப்பட்ட மிஸ் சவுத் இந்தியா பட்டம் திரும்ப பெறப்பட்டதால் பரபரப்பு

Saturday, June 1, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகையும் கடந்த 2016ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றவருமான மீரா மிதுன் சமீபத்தில் தான் சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்த அழகிப்போட்டியை தடுத்து நிறுத்த சிலர் திட்டமிடுவதாகவும், அதுமட்டுமின்றி, தனக்கும் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் தமிழ்ப் பெண்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்துவருவதாகவும் சென்னை காவல்துறையினர்களிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை மீரா மிதுனுக்கு வழங்கப்பட்ட ‘மிஸ் சவுத் இந்தியா’ அழகி பட்டத்தை அவர் தவறாக பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இந்த புகாரை அடுத்து 2016ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்ட மிஸ் சவுத் இந்தியா படத்தை திரும்ப பெறுவதாக மிஸ் தமிழ்நாடு' அமைப்பு அறிவித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' மற்றும் '8 தோட்டாக்கள்' உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ள நடிகை மீரா மிதுன், சிறுவயதில் இருந்தே மாடலிங் துறையில் ஆர்வமுள்ளவர். மிஸ் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு உட்பட நான்கு அழகி பட்டங்களை வென்ற இவர், தமிழ்ப்பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் அழகி போட்டி ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.