நீட் தேர்வு எழுதிவிட்டு மாயமான மாணவி காதலனுடன் தஞ்சமா?

  • IndiaGlitz, [Sunday,September 19 2021]

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நீட் தேர்வு எழுதிய மாணவி ஒருவர் திடீரென மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது அவர் காதலனிடம் தஞ்சம் அடைந்துள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஞாயிறன்று நீட் தேர்வு எழுதிய ஒரு மாணவர் மற்றும் இரண்டு மாணவிகள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திடீரென நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்வேதா என்ற மாணவி மாயமானார். கடந்த ஞாயிறு அன்று நீட் தேர்வு எழுதிய ஸ்வேதா, நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் வரும் என்று சோகத்தில் இருந்ததாக கூறப்பட்டது.

இதனையடுத்து பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாணவி ஸ்வேதாவை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் காவல் நிலையத்தில் மாணவி ஸ்வேதா தனது காதலனுடன் தஞ்சம் அடைந்து உள்ளார் என்ற தகவல் நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து மாணவி ஸ்வேதா பத்திரமாக உள்ளார் என்ற தகவலை அவரது பெற்றோர்களுக்கு காவல்துறையினர் தகவல் அளித்தனர். இந்த நிலையில் மாணவி ஸ்வேதாவின் பெற்றோர் தற்போது தேனிக்கு விரைந்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.