close
Choose your channels

மிசோரத்தில் 12 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா… வெறும் 8 நாட்களில் வெடித்த சர்ச்சை!!!

Saturday, October 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மிசோரத்தில் 12 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா… வெறும் 8 நாட்களில் வெடித்த சர்ச்சை!!!

 

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. அதைத் தொடர்ந்து அனைத்துப் பள்ளி கல்லூரிகளும் இயங்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் பொருளதார முடக்கம், மக்களின் இயல்பு வாழ்க்கை போன்ற பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவில் படிப்படியாக ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டன.

இதனால் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளைத் திறந்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால் தொற்று அதிகமாக உள்ள பகுதிகளுக்கு தடை நீடிக்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் தமிழகத்தில் இன்னும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருக்கின்றன. இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி மிசோரம் மாநிலத்தில் பள்ளி, கல்லரிகளை திறப்பதற்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியது.

அதைத் தொடர்ந்து பாதுகாப்பு வழிமுறைப் பின்பற்றி விருப்பம் உடைய மிசோரம் பகுதியில் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்தனர். ஆனால் பள்ளி திறக்கப்பட்ட இரண்டு நாட்கள் கழித்து மிசோரத்தில் உள்ள லாங்க்லடாய் பகுதியில் செயல்பட்ட பள்ளி ஒன்றில் 2 மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டது.

அடுத்து செமாபாக் பகுதியில் உள்ள எபினேசர் பகுதியில் 8 மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டதும் உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதனால் மிசோரம் பகுதியில் இயங்கும் அனைத்துப் பள்ளிகளையும் மூடுவதற்கு அம்மாநில அரசு உத்தரவிட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.