சபாநாயகர் தனபால் வேண்டுமென்றே சட்டையைக் கிழித்துக்கொண்டார்: மு.க.ஸ்டாலின்

  • IndiaGlitz, [Saturday,February 18 2017]

சட்டை கிழிந்த நிலையில் சட்டமன்றத்தில் இருந்து வெளியே வந்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தான் உள்பட திமுக உறுப்பினர்கள் அனைவரும் காவல்துறையினர்களாl தாக்கப்பட்டதாக கூறினார்.
மேலும் திமுக உறுப்பினர்கள் சபாநாயகரின் சட்டையை கிழித்ததாக கூறப்படுவதில் உண்மையில்லை என்றும் சபாநாயகர் தனபால் வேண்டுமென்றே தன்னுடையசட்டையைக் கிழித்துக்கொண்டார் என்றும், திமுக உறுப்பினர்களின் சட்டைகள் தான் காவலர்களால் கிழிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும் ஆளுனரை தற்போது சந்தித்து பேரவையில் நடந்தவற்றை தெரிவிக்க இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

More News

எடப்பாடி பழனிச்சாமி அரசு. ஆதரவு 122, எதிர்ப்பு 11

திமுக, காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகள் வெளியேற்றத்திற்கு பின்னர் சற்றுமுன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியுள்ளது.

சபாநாயகர் சரியாக செயல்படவில்லை. மார்க்கண்டேய கட்ஜூ

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அரசுக்கு நம்பிக்கை வாக்கு கோரியதால் கூட்டப்பட்ட சட்டசபை பெரும் அமளியாகியுள்ளது

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது

சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதும், காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததும் சற்றுமுன் நடந்த சம்பவங்களாக இருந்த நிலையில் சற்றுமுன் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியுள்ளது.

சட்டப்பேரவையில் இருந்து ஸ்டாலின் வெளியேற்றம். சட்டை கிழிந்திருந்ததால் பரபரப்பு

சபாநாயகரின் உத்தரவை அடுத்து திமுக உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில் சற்று முன்னர் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியேற்றப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவையில் தரையில் அமர்ந்து ஸ்டாலின் போராட்டம்.

சபாநாயகரின் உத்தரவின்பேரில் திமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்து குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.