எஸ்பிபிக்காக தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்த முக ஸ்டாலின்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் இன்று இசை ரசிகர்களை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு காலமானார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அவருடைய மறைவிற்கு ஒட்டுமொத்த இந்திய திரை உலகமும், அரசியல்வாதிகளும், பதவியில் இருக்கும் விஐபிக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் ஏற்கனவே எஸ்பிபியின் மறைவிற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்த திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தற்போது எஸ்பிபிக்காக தமிழக அரசிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: தமிழர்களின் நெஞ்சில் நிறைந்தவராக அரை நூற்றாண்டு காலம் புகழோடு விளங்கி, பத்மஸ்ரீ-பத்மபூஷண் விருதுகள் பெற்ற எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் இறுதிப்பயணம் உலகெங்கிலும் வாழும் ரசிகர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் முழு அரசு மரியாதையுடன் நடைபெற தமிழக முதல்வர் ஆவன செய்ய வேண்டும்! என்று கோரிக்கை வைத்துள்ளார்.

முன்னதாக எஸ்பிபி அவர்களுக்காக இரங்கல் தெரிவித்து முக ஸ்டாலின் அவர்கள் கூறியதாவது: பாடும் நிலா எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவை கோடிக்கணக்கான ரசிகர்கள் தம் சொந்தக் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பாகவே கருதுகிறோம். மன அழுத்தத்துக்கு இயற்கையான மாமருந்து அவர்! தம்பி சரணுக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதல்! இனிய குரலால் என்றென்றும் உயிர்த்திருப்பார் எஸ்.பி.பி!

 

More News

மீண்டும்‌ உங்களை இந்த மண்ணில்‌ வரவேற்க காத்திருக்கிறேன்‌: சிம்பு

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் இன்று மதியம் 1:04 மணிக்கு காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சிம்பு எஸ்பிபி

குழல் இனிது, யாழ் இனிது எல்லாம் கிடையாது: எஸ்பிபி குரல் தான் இனிது: கலைப்புலி எஸ் தாணு!

பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள், எஸ்பிபியின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

எல்லா துக்கத்திற்கும் ஒரு அளவு இருக்கு, ஆனா இதுக்கு அளவே இல்லை; இளையராஜா

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் இன்று மதியம் 1:04 மணிக்கு காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில்

ஏற்கனவே பயன்படுத்திய 3 லட்சம் ஆணுறைகளை விற்க முயன்ற கும்பல்… பரபரப்பு சம்பவம்!!!

வியட்நாமில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை சட்டவிரோதமாக ஒரு கும்பல் விற்க முயன்ற சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒரு ஓவியம் ரூ.114 கோடி… தெறிக்கவிடும் அதன் சிறப்புகள்!!!

சீனாவில் 700 ஆண்டு பழமையான ஓவியம் ஒன்று ஏலம் விடப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.