அப்பாவை விட பெரியப்பாவிடம் பாராட்டு வாங்குவது தான் கடினம்..! ஸ்டாலின் உருக்கம்.

  • IndiaGlitz, [Saturday,March 07 2020]

இனமான பேராசிரியரும் திமுகவின் பொதுச்செயலாளருமான பேரா.அன்பழகன் இன்று அதிகாலை உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். கடந்த ஓராண்டாகவே உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்த நிலையில் உடல் நிலை மிக மோசமானதைத் தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோடு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கேயே அவர் உயிர் பிரிந்தது.

அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக கீழ்ப்பாக்கம் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. தி.மு.க கட்சியின் சார்பாக 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவருடன் தி.க தலைவர் வீரமணி திமுக மூத்த நிர்வாகிகள் பிரபலங்கள் பேரா. அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் அன்பழகனின் மறைவிற்கு இரங்கற்பா ஒன்று எழுதி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். முப்பாலூட்டிய பேராசிரிய பெரியப்பா என தொடங்கும் அந்த பதிவு.. திராவிடச் சிகரம்.. இனமான இமயம் என தொடர்ந்து.. உங்கள் அறிவு ஒளியில் எங்கள் பயணம் தொடரும் பேராசிரிய பெருந்தகையே என நிறைவடைகிறது.