close
Choose your channels

கமல் பிரச்சாரம் செய்ய மக்கள் நீதி மய்யம் உறுப்பினரின் மனைவி எதிர்ப்பு

Thursday, May 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளிலும் வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து இந்த நான்கு தொகுதிகளிலும் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினர் பாலமுருகன் என்பவர் சமீபத்தில் சூலூர் மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் திடீரென உயிரிழந்தார். ஆனால் அவர் உயிரிழந்தது தொடர்பாக கமல்ஹாசன் ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்று பாலமுருகனின் மனைவி உள்பட சூலூர் பகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில் சூலூரில் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து பாலமுருகனின் மனைவி ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.