close
Choose your channels

சார்ஜ் போட்டு வீடியோகால் பேசிய பெண்: மொபைல் வெடித்ததால் ஏற்பட்ட விபரீதம்

Tuesday, April 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சார்ஜ் போட்டு கொண்டே மொபைல் போனில் பேசக்கூடாது என்றும், இதுபோன்று பேசினால் மொபைல் வெடித்து விபரீதம் ஏற்பட்டுள்ள பல சம்பவங்கள் நடந்துள்ளது என்று தெரிந்தும் திருவாரூரை சேர்ந்த பெண் ஒருவர் சார்ஜ் போட்டு கொண்டே வீடியோகாலில் பேசியதால் அவருக்கு பெரும் விபரீதம் ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் என்ற பகுதியை சேர்ந்த சுகுமார் என்பவர் வெளிநாட்டில் பணி புரிந்து வரும் நிலையில் அவருடைய மகள் ஆர்த்தி, நேற்று காலை தனது தந்தையுடன், செல்போனில் வீடியோ கால் மூலம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவருடைய செல்போன் சார்ஜில் இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் திடீரென பலத்த சப்தத்துடன் செல்போன் வெடித்ததால், செல்போனின் உடைந்த பாகங்கள் ஆர்த்தியின் கண் மற்றும் காதுக்குள் சென்றன. இதனால், வலியில் அலறித்துடித்த ஆர்த்தியை அவரது குடும்பத்தினர் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவருக்கு முதலுதவி மட்டும் அளிக்கப்பட்டு தஞ்சை மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். தற்போது அவருக்கு கண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொடரந்து அவர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.