close
Choose your channels

தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத்திசிங் மொபைல் போன்கள் பறிமுதல்: பெரும் பரபரப்பு

Sunday, September 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரையுலகில் தற்போது போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது தெரிந்ததே. ஏற்கனவே பாலிவுட் நடிகையும் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலியுமான ரியா சக்கரவர்த்தி மற்றும் கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர்கள் போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட 12க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் பிரபல பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலி கான், சாரதா கபூர், மற்றும் ரகுல் ப்ரீத்தி சிங் ஆகியோருக்கு என்சிபி சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மன் அடிப்படையில் மும்பையில் உள்ள என்சிபி அலுவலகத்தில் ரகுல் பிரீத்திசிங் ஆஜரானார். அவரிடம் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. அதேபோல் தீபிகா படுகோனின் மேலாளரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், தீபிகா படுகோன் இன்று ஆஜராவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலை திடீர் திருப்பமாக நடிகைகள் தீபிகா படுகோனே, ஷாரதா கபூர், சாரா அலிகான், கரிஷ்மா பிரகாஷ், ரகுல் ப்ரீத்தி சிங் மற்றும் ஜெயா ஷா ஆகியோர்களின் மொபைல் போன்களை என்சிபி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த மொபைல் போன்களில் போதைப்பொருள் விவகாரம் குறித்த விபரங்கள் இருக்கின்றதா என்று ஆய்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பிரபல நடிகைகளின் மொபைல் போன்கள் என்சிபி அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.