close
Choose your channels

போலீசார் முன் உடைகளை களைந்த மாடல் அழகி

Monday, October 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மும்பையில் உள்ள அபார்ட்மெண்டில் போலீசார் முன் மாடல் அழகி ஒருவர் உடையை கழட்டி கலாட்டா செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் பிரபல மாடல் அழகி மேகா ஷர்மா என்பவர் தான் குடியிருந்த அபார்ட்மெண்டுக்கு போதையுடன் சென்றுள்ளார். அங்கு செக்யூரிட்டியுடன் போதையில் சண்டை போட்ட மேகா ஷர்மா, அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனை வேடிக்கை பார்த்த ஒருவர் காவல்துறைக்கு தகவல் கொடுக்க உடனடியாக போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வந்து செக்யூரிட்டியை மாடல் அழகியிடம் இருந்து மீட்டார். பின்னர் காவல்நிலையத்திற்கு வருமாறு மேகா ஷர்மாவை கான்ஸ்டபிள் அழைக்க, அவர் தற்போது வர முடியாது நாளை காலை வருகிறேன் என்று கூறியுள்ளார். இதனை ஏற்றுக்கொள்ளாத கான்ஸ்டபிள் உடனே வருமாறு வற்புறுத்தியதை ஆத்திரம் அடைந்த மாடல் அழகி உடனே தனது மேலாடையை கழட்டியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஒருபக்கம் மீடூவில் பெண்கள் பாலியல் குற்றங்கள் குறித்து கூறிக்கொண்டிருக்கும் நிலையில் இதுபோன்ற பெண்களின் அநாகரீக செயல்பாடுகள் ஏற்று கொள்ள முடியாத வகையில் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.