மோகன்ராஜா இயக்கும் அடுத்த படத்தில் பிரபல நடிகர்!

  • IndiaGlitz, [Monday,January 20 2020]

விஜய் நடிக்கவிருக்கும் 65ஆவது படத்தை இயக்கும் இயக்குனர்களின் பட்டியலில் மோகன் ராஜாவும் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது மோகன் ராஜா இயக்க உள்ள அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது

ஆயுஷ்குரானா நடிப்பில் இந்தியில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் அந்தாதூன். இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க தனுஷ், சித்தார்த் உள்பட ஒரு சில முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டினார்கள். இந்த நிலையில் பிரபல நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் அவர்கள் இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை சமீபத்தில் பெற்றார். இதனை அடுத்து இந்த படத்தில் பிரசாந்த் ஹீரோவாக நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டது

இந்த நிலையில் அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குனர் மோகன் ராஜா இயக்க இருப்பதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் பிரசாந்துடன் சில முக்கிய நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த தகவல்களும் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக பிரசாந்த் தன்னை உடலளவில் தயார்படுத்தி வருகிறார் என்றும் இதற்காக அவர் சிறப்பு பயிற்சி எடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

More News

நான் இயக்கிய படம் பாதியில் நின்றதற்கு இதுதான் காரணம்: அமீர் அதிர்ச்சி தகவல்

ஜல்லிக்கட்டு பிரச்சனையை மையமாக வைத்து இயக்குனர் அமீர் இயக்கிய ஒரு திரைப்படம் திடீரென பாதியில் நின்று போனது ஏன்? என்ற காரணத்தை இரண்டு வருடம்

என் போன்ற நல்லவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடந்தால் தீபிகாவுக்கு பிரச்சனைகள் வராது..! பாபா ராமதேவ்.

'தீபிகா படுகோன் தன்னை ஆலோசகராக நியமித்துக் கொள்ள வேண்டும்' என யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து துணை ஜனாதிபதி பெருமிதம்

துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு தனது டிவிட்டர் பக்கத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாய வேலையில் ஈடுபட்ட புகைப்படங்களை வெளியிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மசூதியில் நடைபெற்ற இந்து திருமணம்.. 10 சவரன் நகையும் பணமும் கொடுத்த இஸ்லாமியர்கள்..!

கேரள மாநிலம் ஆலப்புழாவின் மசூதி ஒன்றில் இந்து முறைப்படி நடைபெற்ற திருமண விழா மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தின் புதிய மாதிரி வடிவம் வெளியீடு; 2024 க்குள் கட்டி முடிக்கத் திட்டம்

இந்திய நாடாளுமன்றம் வட்ட வடிவிலான கட்டிட அமைப்புடன் மக்களவை, மாநிலங்களவை, மைய மண்டபம் என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.